/* */

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு
X

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை கண்காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்ட நிஷாந்த் கிருஷ்ணா‌ நேற்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணியுடன் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிப்பவர்கள் தேர்தல் பார்வையாளரின் கைபேசி எண் 8807600787-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கனவே செயல்பட்டுவரும் இலவச தொலைபேசி எண்கள், மாநகராட்சி - 180042594890, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் - 18004250424என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...