ஈரோடு மாவட்டத்தில் 1000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 1000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 861 பேருக்கு பரிசோதனை செய்ததில் 777 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 906 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 191 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 317 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 518 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 83 வயது முதியவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 13-ம் தேதி இறந்தார். இதேபோல், 73 வயது முதியவரும் கடந்த 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்தது.தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 3 ஆயிரத்து 955பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
application of ai in agriculture