/* */

நம்பியூர்: குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

நம்பியூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

நம்பியூர்: குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகாலூர் அருகே குமரன்சாலையை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 56). மரம் ஏறும் தொழிலாளி.இவரது மனைவி சுப்பாயாள் சமையல் செய்ய, நேற்று காலை கேஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் டியூப் பகுதியில் தீப்பற்றியது. இதனால், அதன் மீது தண்ணீரை ஊற்றி தம்பதியினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ வேகமாக பரவி சென்னியப்பனின் குடிசை வீட்டில் பற்றி எரிந்தது. நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் குடிசை தீயில் எரிந்து சேதமானது.இச்சம்பவம் குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 4:15 PM GMT

Related News