அந்தியூர் அருகே வீட்டில் மர்மமான முறையில் கூலித்தொழிலாளி மரணம்

X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |16 April 2022 5:30 AM IST
அந்தியூர் அருகே வீட்டில் மர்மமான முறையில் கூலித் தொழிலாளி ஒருவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் கசாப்புக் கடை வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 37). நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர், ராஜாவுக்கு டீ கொடுக்க சென்றுள்ளார்.அப்போது, அவரது வீட்டில் மயங்கி கிடந்த ராஜாவை எழுப்பியுள்ளார்.
எவ்வித அசைவும் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu