/* */

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு: ஒருவர் கைது

அந்தியூர் அருகே உள்ள பாலகுட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட சோமசுந்தரம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஜி.எஸ்.காலனி பாலகுட்டை டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 55). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலை 6 மணியளவில் வந்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த கந்தவேல் உறவினர்களுடன் தேடியதில், பாலகுட்டை ஆதிபராசக்தி கோயில் அருகே மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். உடனே அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து, அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பர்கூர் ஈரெட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (36) என்பதும், கடந்த 16 வருடங்களுக்கு முன்பு, கந்தவேல் வீட்டில் வேலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கந்தவேல் அளித்த புகாரில் பேரில் சோமசுந்தரத்தை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

Updated On: 14 Aug 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்