/* */

ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய வீஏஓ கைது

ஈரேடு அருகே பட்டா மாறுதலுக்காக 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு அருகே லஞ்சம் வாங்கிய வீஏஓ கைது
X

வடுகபட்டி அ,  கிராம நிர்வாக அலுவலகம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா அஞ்சூர் அடுத்த குழந்தைபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (30). இவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள வடுகபட்டி அ, கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அரச்சலூர் அடுத்த வடுகப்பட்டி, வடக்கு வீதியை சேர்ந்த புவனேஸ்வரி (35)-ன் கணவர் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக வடுகபட்டியில் உள்ள வீட்டை பட்டா மாறுதல் செய்வதற்காக புவனேஷ்வரி கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை அணுகியுள்ளார்.

அப்போது வெற்றிவேல் புவனேஸ்வரியிடம் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதில் பேரம் பேசி இறுதியாக ரூ.30 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ரூ.19 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் மீதித் தொகையை கேட்டு அடிக்கடி புவனேஷ்வரியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புவனேஸ்வரி புகார் அளித்தார். இதனையடுத்து, புவனேஸ்வரி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விஏஒ., வெற்றிவேலிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ., வெற்றிவேலை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு வரை வெற்றிவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்க்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Updated On: 20 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...