/* */

அரச்சலூரில் புளியமரத்தில் மோதி கார் விபத்து: இருவர் பலி

அரச்சலூர் அருகே புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

HIGHLIGHTS

அரச்சலூரில் புளியமரத்தில் மோதி கார் விபத்து:  இருவர் பலி
X

விபத்துக்குள்ளான கார்.

திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அடுத்த பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (25), எலக்ட்ரிஷன். திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாப்பாகாடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (23) மெக்கானிக். இவர்கள் இருவரும் காரில் ஈரோட்டுக்கு சென்று விட்டு வேலையை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை நத்தகாடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை பூபதி ஓட்டி வந்துள்ளார். கார் அரச்சலூர் அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வரும்போது ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்தது. காரில் இருந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த ஏஎஸ்பி., கௌதம் கோயல், அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்