/* */

விவசாயிகளை காப்பது முதல் பணி திமுக துணை பொதுச்செயலாளர்

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

விவசாயிகளை காப்பது  முதல் பணி    திமுக துணை பொதுச்செயலாளர்
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், திமுக துணை பொது செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் அலுவலர் ஜெயராணியிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்னை எதிர்த்து பா.ஜ.க போட்டியிடுகிறது. அதிமுகவினருக்கு இந்த தொகுதியில் இடம் ஒதுக்க வில்லையே என்ற வருத்தம் உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதி முழுவதும் விவசாயிகள் நிறைந்த பகுதி. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளை காப்பது தனது முதல் பணி என்றார்.

வேட்பு மனு தாக்கலின் போது திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .பிரகாஷ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் , கதிர்வேல், நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 March 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  2. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  3. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  4. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  5. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  6. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  8. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  10. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...