/* */

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாள் அனுசரிப்பு
X

தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய மொடக்குறிச்சி எம்எல்ஏ., டாக்டர் சி.சரஸ்வதி.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர் சொந்த ஊரானா அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அரசின் சார்பில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் எம்எல்ஏ., வெங்கடாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.,யுமான அந்தியூர் செல்வராஜ் , ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, பாஜ., கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனார்.

நினைவு தினத்தை முன்னிட்டு ஓடாநிலை கிராமத்திலும், அந்தப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 3 Aug 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்