/* */

அதிமுக - மக்கள் நீதி மய்யம் மோதல்

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட கூடாது எனக்கூறி அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

அதிமுக - மக்கள் நீதி மய்யம் மோதல்
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆனந்த்ராஜேஷ் வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார்.


அப்போது மொடக்குறிச்சி அருகே உள்ள பள்ளியூத்து என்னும் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அதிமுக பிரமுகர்கள் இந்த ஏரியா அதிமுகவின் கோட்டை என்றும் இங்கு யாரும் ஓட்டு கேட்க வரக்கூடாது என்றும் கூறி மக்கள் நீதி மையம் வேட்பாளர் ராஜேஸை தகாத வார்த்தைகள் பேசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் நீதி மையம் வேட்பாளர் உடன் சென்ற நிர்வாகிகள் மற்ற உறுப்பினர்கள் அதிமுக பிரமுகரை தடுத்து நிறுத்த முற்பட்டதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அரச்சலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பிரச்சாரம் செய்யும் வேட்பாளரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் உடனடியாக அவர்களை பிரச்சாரம் செய்ய அனுமதியுங்கள் என்று கூறி அதிமுக பிரமுகர்களை அங்கிருந்து அப்புறபடுத்தினர். இருகட்சியினருக்குமிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 25 March 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு