/* */

மீன் வியாபாரியிடமிருந்து 1.30லட்சம் பறிமுதல்

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மீன் வியாபாரியிடமிருந்து 1.30லட்சம் பறிமுதல்
X

ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருமாண்டாம்பாளையத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை இருப்பது தெரியவந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் பாலதண்டாயுத வீதியைச் சேர்ந்த ராஜேஷ் (36), மீன் வியாபாரி என்பதும் மீன் வாங்குவதற்காக நாகப்பட்டிணம் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 31 March 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!