/* */

மொடக்குறிச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

மொடக்குறிச்சி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
X

பைல் படம்.

மொடக்குறிச்சி அடுத்த சின்னுசாமிபுரத்தை சேர்ந்தவர் வரதன். பந்தல் போடும் தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி. இவர்களுக்கு மலர்கொடடி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. இதனால் சில மாதங்களுக்கு முன்பு, பெருமாயி தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த வாரம் பெருமாயிடம் சமாதானம் பேசி, வீட்டிற்கு வரதன் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மகள் மலர்கொடியின் பிறந்தநாளையொட்டி வீட்டில் அனைவரும் ஒன்றாக காலை உணவு அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது தம்பதியர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வரதன், பெருமாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, பெருமாயியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த வரதனை மொடக்குறிச்சி போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த வரதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!