/* */

கீழ்வாணியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி துவக்கம்

கீழ்வாணி இந்திராநகரில் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கீழ்வாணியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி துவக்கம்
X

நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சி இந்திராநகரில் உள்ள மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட்டது.இதனால், தொட்டியை தாங்கி நிற்கும் தடுப்பு தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்ததால், தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில், இந்திராநகரில் 15வது மானிய நிதிக்குழுவில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்து, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதைதொடர்ந்து, அதற்கான பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. கீழ்வாணி ஊராட்சி மன்ற தலைவி செல்வி நடராஜன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி, புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், ஒன்றிய தலைவி வளர்மதி தேவராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள் புஷ்பாவதி மற்றும் கஸ்தூரி , ஊராட்சி செயலாளர் பிரபாகரன் , தலைமையாாசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு