/* */

சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயத்தை ஊற்றிய மர்ம நபர்கள்

சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டியின் மீது மீது காவி சாயம் பூசியவர்களை கைது செய்யக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டி மீது காவி சாயத்தை ஊற்றிய மர்ம நபர்கள்
X

சத்தியமங்கலத்தில் பெரியார் சுவரொட்டியின் மீது மீது காவி சாயம் பூசியவர்களை கைது செய்யக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், சத்தியமங்கலம் நகரம் முழுவதிலும் பெரியாரின் புகைப்படம் இடம்பெற்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் சத்தி பேருந்து நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் இருந்த பெரியார் படத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் காவிச் சாயத்தை பூசி இருந்தனர்.


தமிழக அரசு பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ள நிலையில், சத்தியமங்கலத்தில் பெரியாரின் புகைப்படத்தின் மீது காவிச் சாயம் பூசிய சமூக விரோதிகள் மீது தேச விரோத வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த சதுமுகை பழனிச்சாமி தலைமையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சத்தி துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சிசார்பில் தம்பிராஜன், தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குணசேகரன், தமுமுக சார்பில் ஆசிப், மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!