பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டின் பேபி வாய்க்கால் தூர்வாரும் பணி: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்!

பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டின் பேபி வாய்க்கால் தூர்வாரும் பணி: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்!
X
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பவானி அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனம் மூலம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்காலில் கழிவு நீர் கலக்காமல் இருக்க, வலது கரையில் பேபி வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் மண் மற்றும் புதர்களால் நிரம்பியதால் தூர்வார முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, அணைக் கட்டில் இருந்து 20 கி.மீ தொலைவுக்கு தூர்வாரும் பணிக்கு ரூ.28.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பவானியை அடுத்த கோணவாய்க்கால் பகுதியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈரோடு எம்பி பிரகாஷ், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கோபி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story