Begin typing your search above and press return to search.
ரூ.13 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி
சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பூங்காக்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சித்தோடு பேரூராட்சி பகுதியில் பூங்காக்கள் சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சித்தோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 3 பூங்காக்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பூங்காக்கள் சுற்று சுவர் அமைக்கவும், அதே பகுதியில் உள்ள அங்கான்வாடி மையத்திற்கு சுற்று சுவர் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார்.