/* */

ஈரோடு: கறவை மாடுகளை பராமரிக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் கறவைமாடுகளை பராமரிப்புக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு .

HIGHLIGHTS

ஈரோடு: கறவை மாடுகளை பராமரிக்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

பெருந்துறை வட்டம் முருங்கத்தொழுவு பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் 38 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில், கறவை மாடு பராமரிப்பு கடன் திட்டத்தின் கீழ் கனரா வங்கி சார்பில் கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டது. இந்த கடன் அட்டை மூலம் பால் உற்பத்தியாளர்கள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்டும் வகையில், வங்கியில் 7 சதவீத வட்டியில் கால்நடை ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் வீதம் கடன் பெற்று கொள்ளலாம்.

அந்த கடன் தொகை ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் 3 சதவீத வட்டி தொகை திரும்ப பெறலாம். எனவே திட்டத்தின் அனைத்து பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்