/* */

கோபியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு

ஈரோடு மாவட்டம் கோபி நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோபியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிப்பு
X

கோபி கச்சேரி  மேடு பகுதியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோபி நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர அதிமுக சார்பில் கச்சேரி மேடு பகுதியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபி நகர செயலாளர் ப்ரிணியோ கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில், கோபி நகர் மன்ற உறுப்பினர்கள் தனசேகரன், கார்த்திகேயன், தமிழ்செல்வன் மற்றும் வார்டு செயலாளர்கள் அனு நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jan 2024 10:03 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்