/* */

பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது

அந்தியூர் அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாதுரை (வயது 25). கூலித் தொழிலாளி. மகாதுரை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த உறவினர் வீட்டில் ஈரோடு பகுதியை சேர்ந்த பிளஸ்1 மாணவி வந்துள்ளார். அந்த மாணவி உறவினர் வீட்டுக்கு வந்ததால், மகாதுரை அந்த மாணவியிடம் பழகி வந்துள்ளார். இதைப்பயன்படுத்தி அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் இது குறித்து மாணவிகளிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். இதில் மாணவி நடந்தவற்றை கூறி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகாதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...