/* */

ஈரோடு மாவட்டத்தில் 423 மையங்களில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 423 மையங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 423 மையங்களில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் 25வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 423 மையங்களில் நாளை சனிக்கிழமை (மார்ச் 19) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகம் முழுவதும் மார்ச் 19ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள்.பள்ளிகள் உள்பட 423 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணையாக 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,692 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 56 வாகனங்கள் முகாமிற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது. 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் அச்சமின்றி, தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 17 March 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்