/* */

இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக சாராயத்தை கொண்டு சென்றவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாராயத்தை இருசக்கர வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக சாராயத்தை கொண்டு சென்றவர் கைது
X

கைது செய்யப்பட்ட குமார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாராய விற்பனை நிகழ்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, சென்னம்பட்டியில் வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (வயது 47) என்பவர் சேலம் மாவட்டம் கொளத்தூரில் இருந்து சாராயத்தை வாங்கி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து 5லிட்டர் பறிமுதல் செய்து கைது செய்தனர்.மேலும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!