அந்தியூர் அருகே வெள்ளைத்தாளில் எழுதி லாட்டரி சீட்டு விற்றவர் கைது‌

அந்தியூர் அருகே வெள்ளைத்தாளில் எழுதி லாட்டரி சீட்டு விற்றவர் கைது‌
X

பைல் படம்

அந்தியூர் அருகே வெள்ளைத்தாளில் எழுதி லாட்டரி சீட்டு என விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் வேங்கையன் வீதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் இன்று மாலை அப்பகுதிக்கு சென்ற அந்தியூர் போலீசார், ஜெகதீசன் என்பவரை கைது செய்து அந்தியூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.ஜெகதீசன் மீது வெள்ளைத்தாளில் நம்பரை எழுதி லாட்டரி என கூறி விற்றதாக வழக்குப்பதிவு செய்த அந்தியூர் போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?