அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.22 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

X
பைல் படம்.
By - S.Gokulkrishnan, Reporter |27 April 2022 7:14 AM IST
புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஐந்து லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 42 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 630 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 520 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 570 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 400 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 410 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 250 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 3,000 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu