புத்தாண்டையொட்டி ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.5.28 கோடிக்கு மது விற்பனை

புத்தாண்டையொட்டி ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.5.28 கோடிக்கு மது விற்பனை
X
ஈரோட்டில் புத்தாண்டையொட்டி, நேற்று ஒரே நாளில் ரூ.5.28 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் பொது மேலாளர் தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 கடைகள் பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வரும். ஆனால், பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிகமாக மதுபானங்கள் விற்பனை ஆகி வருகிறது.

புத்தாண்டையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. வழக்கத்தைவிட ரூ.1 கோடியே 28 லட்சத்துக்கு கூடுதலாக மதுபானம் விற்பனை ஆகியுள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story