/* */

அந்தியூர் : சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அந்தியூர் அருகே சட்ட விரோதமாக வெவ்வேறு இடங்களில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூர் :  சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிவசக்தி நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (62) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தங்கவேலு கைது செய்த போலீசார், இவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், அந்தியூர் பாலகுட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், மைக்கேல்பாளையம் நஞ்சமடைகுட்டை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தொட்டையன் (32) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மொத்தம் 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  5. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்