/* */

வெள்ளித்திருப்பூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

வெள்ளித்திருப்பூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு
X

அந்தியூர் அரசு மருத்துவமனை.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஒலகடம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் சண்முகம் (56). இவரது மகன் கார்த்தி (வயது 38). கூலித் தொழிலாளியான கார்த்திக்கு திருமணமாகி மனைவியுடன் கருந்து வேறுபாடு ஏற்பட்டு தந்தையுடன் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கார்த்தி ஒலகடம் சந்தையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டது.

இதனையடுத்து, பாம்பு கடித்த பயத்தால் எழுந்து ஓடிய கார்த்தி மயங்கி கீழே விழுந்ததார். இதுகுறித்த தகவலறிந்து வந்த சண்முகம், கார்த்தியை மீட்டு பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Aug 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!