கொடிவேரி அணை மூன்று நாட்களுக்கு மூடல்
கொடிவேரி அணை (கோப்புப் படம்).
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மூன்று நாட்களுக்கு மட்டும் கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுகிறது.
இதுதொடர்பாக இன்று (1ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மழைபெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பவானிசாகர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து வர வாய்ப்புள்ளது.
மேலும், பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து, பவானி ஆற்றில் 1155 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு முன்னிட்டு நாளை மறுதினம் (3ம் தேதி) மற்றும் 4ம் தேதி ஆகிய நாட்களில் கொடிவேரி அணைக்கட்டிற்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், எந்நேரமும் பவானி ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாளை (2ம் தேதி) வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்களுக்கு மட்டும் கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu