/* */

அந்தியூரில் டூவிலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒருவர் பலி

அந்தியூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அந்தியூரில் டூவிலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் மேலும் ஒருவர் பலி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பருவாச்சி அம்மன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபாலும், அவரது நண்பர் பழனிச்சாமியும், நேற்று இரவு, அந்தியூரில் இருந்து பருவாச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

கந்தாம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களும், ராஜகோபால் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு, ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவருடன் வந்த பழனிச்சாமி படுகாயமடைந்த நிலையில், கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி இறந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த கண்ணடிபாளையத்தை சேர்ந்த 6 பேர் அந்தியூர் மருத்துவமனைகளும் ஈரோடு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  3. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  5. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  6. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!