சென்னிமலையில் வரும் மார்ச் 22ம் தேதி வரை காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னிமலை பேரூராட்சி பகுதியில் வரும் மார்ச் 22ம் தேதி வரை காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னிமலை பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஆற்றில் குடிநீர் எடுக்கும் இடத்தில் பராமரிப்பு பணி வரும் 22ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதனால், வரும் 22ம் தேதி வரை காவிரி குடிநீர் சென்னிமலைக்கு வராது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதனால் ஒட்டங்குட்டை தண்ணீர் சப்ளை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகளில் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu