ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
X

அரசு தேர்வுகள் இயக்ககம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளை மார்ச்-ஏப்ரல் 2025ல் தேர்வு எழுத விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் வரும் டிச.17ம் தேதி வரை (08.12.2024 மற்றும் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. பவானி-638301, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை - 638052, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம்-638402, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. ஈரோடு-638001, நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி கோபிசெட்டிபாளையம் -638452, நகரவை உயர்நிலைப்பள்ளி இடையன்காட்டுவலசு, ஈரோடு-638001, ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளி கொல்லம்பாளையம், ஈரோடு-638002 ஆகியசேவை மையங்களை நேரில் அணுகி தேர்வுக் கட்டணத்தொகை மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்ற பத்திரிக்கை செய்தி நாளிதழ்களில் வெளியிட அனுமதி பணிந்து வேண்டப்படுகிறது.

Next Story
ai automation in agriculture