/* */

ஈரோடு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 13 பேருக்கு கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்திலும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் மெல்ல தலைதூக்கத் துவங்கியுள்ளது. ஈரோட்டில் கடந்த வாரம் முழுவதும் தினமும் சராசரியாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அதாவது 7 நாட்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முகாமிட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து தொற்று பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதாரப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Jun 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  3. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  4. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  5. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  6. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  7. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  8. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  9. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  10. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...