அந்தியூர் பிரம்மதேசம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவர் கைது

அந்தியூர் பிரம்மதேசம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் ஒடப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
future ai robot technology