அத்தாணியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌

அத்தாணியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது‌
X

பைல் படம்

அத்தாணியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசின் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட குமாரபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare