Begin typing your search above and press return to search.
எல்லீஸ்பேட்டையில் மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் விஷம் குடித்து தற்கொலை
பவானி அருகே உள்ள எல்லீஸ்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை, ஏசுநாதர் கோயில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இவர்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், மனைவி எலிசபத் நடத்தையில் சந்தேகப்பட்டு சாமிநாதன் சண்டை போட்டு வந்துள்ளார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வழக்கம் போல சண்டை வந்துள்ளது.
அப்போது மனமுடைந்த சாமிநாதன் வீட்டை சுத்தம் செய்யும் கிருமிநாசினியை எடுத்து குடித்துவிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த சாமிநாதன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, காஞ்சிக்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.