/* */

எல்லீஸ்பேட்டையில் மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் விஷம் குடித்து தற்கொலை

பவானி அருகே உள்ள எல்லீஸ்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

எல்லீஸ்பேட்டையில் மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை, ஏசுநாதர் கோயில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இவர்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், மனைவி எலிசபத் நடத்தையில் சந்தேகப்பட்டு சாமிநாதன் சண்டை போட்டு வந்துள்ளார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வழக்கம் போல சண்டை வந்துள்ளது.

அப்போது மனமுடைந்த சாமிநாதன் வீட்டை சுத்தம் செய்யும் கிருமிநாசினியை எடுத்து குடித்துவிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த சாமிநாதன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, காஞ்சிக்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Aug 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்