Begin typing your search above and press return to search.
அந்தியூரில் நாளை குதிரை ரேக்ளா எல்லை பந்தயம்
அந்தியூரில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நாளை, மாபெரும் குதிரை ரேக்ளா எல்லை பந்தயம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக ஒன்றியம் சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற உள்ளது.
இப் போட்டியானது, அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள, சீதாலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள ஏஎல்எம்பி பெட்ரோல் பங்கில் இருந்து, முத்தரசன் குட்டை செக்போஸ்ட் வரை நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் போட்டியினை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்கிறார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகிக்கிறார்.