மழை எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

மழை எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு
X

கருங்கல்பாளையம் மாட்டு சந்தை.

கனமழை எதிரொலியால் கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாடுகளை கொண்டு வருவது வழக்கம். இதேபோல் கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ,தெலுங்கானா, நேபாளம், கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகள் வாங்கிச் செல்வதும் வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெளிமாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வருவது இல்லை. மேலும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் பசு - 250, எருமை - 150, கன்று - 50 என மொத்தம் 450 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடு விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture