Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை துணை இயக்குநர் அலுவலகம் திண்டலில் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர்.
தனித்திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள், நிலை 1 பணியிடங்களை மீளப்பெற்று தொடர்ந்து நிலை நிறுத்தி மக்கள் நலன் காத்திக் கோரியும், ஓய்வில்லாது கொள்ளைநோய்த் தடுப்பு பணியாற்றி வரும் 900 சுகாதார ஆய்வாளர்கள். நிலை II பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிடக் கோரியும், சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடக் கோரியும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர்.