/* */

பவானி: லட்சுமி நகரில் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார்

பவானி அருகே லட்சுமி நகர் தேசிய நெடுஞ்சாலையில், காரில் கடத்த முயன்ற 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பவானி: லட்சுமி நகரில் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார்
X

500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட லட்சுமி நகர் சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஓசூரில் இருந்து திருப்பூர் நோக்கி, சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாதேசன் என்பவர் ஓசூரில் இருந்து திருப்பூருக்கு 500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக குட்கா பொருட்களை கொண்டு சென்ற ஓட்டுநர் மாதேசன் மீது சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 25 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...