அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.38 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.38 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
X

நிலக்கடலை பைல் படம்

அந்தியூர் விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.38 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்தில், செம்புளிச்சாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம் பருவாச்சி உள்ளிட்ட பல்வேறு இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், 55 மூட்டைகள் பச்சை நிலக்கடலலையை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ பச்சை நிலக்கடலை குறைந்த பட்சமாக 35 ரூபாய் 74 பைசாவிற்கும், அதிகபட்சமாக 39 ரூபாய் 29 பைசாவிற்கும், 19 மூட்டை காய்ந்த நிலக்கடலை குறைந்த பட்சமாக 65 ரூபாய்க்கும் , அதிக பட்சமாக 72 ரூபாய்க்கும் ஏலம் போனது. நேற்றைய , வர்த்தகத்தில், 38.07 குவிண்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture