/* */

கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு; முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து மூதாட்டி உயிரிழப்பு
X

பச்சையம்மாள்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 77). இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 72). இருவரும் கோபிசெட்டிபாளையம் மார்க்கெட்டில் கீரை வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தனர். ஆனால் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இனி வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார். பெரிய தம்பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 May 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...