/* */

பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
X

கிணற்றில் விழுந்த மூதாட்டியை மீட்க்கும் தீயணைப்பு துறையினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள ஆர் எஸ், கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவரது மனைவி பாப்பாயி (வயது 90). கணவனை இழந்த இவர், தனது வீட்டு தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உதவியாக இவரது தம்பி இருந்து வந்த தம்பி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனார். தம்பி இறந்த துக்கம் தாளாமல் மன உளைச்சலுடன் இருந்து வந்த இவர், நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 10 அடி தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக, அக்கம்பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி, கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி மூதாட்டியின் சடலத்தை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்