/* */

கோபி: ரூ.30.50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் முத்துசாமி

கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில், ரூ.30.50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கோபி: ரூ.30.50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் முத்துசாமி
X

மொடச்சூர் ஊராட்சியில், ரூ.30.50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை, அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள மொடச்சூர் ஊராட்சியில் திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் வரவேற்றார்.

விழாவில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சுற்றுச்சுவர் கட்டுதல், 5 இடங்களில் வடிகால் அமைத்தல் என ரூ.30 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ஊராட்சி மன்றத்தலைவர் சரவணகுமார், சொந்தநிதியில் இருந்து கொரோனோ நிவாரணத்திற்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை, அமைச்சரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, அங்கிருந்த தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள். தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஈரோடு வடக்குமாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், குமணன், சிந்துரவிச்சந்திரன் உட்பட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!