/* */

டீக்கடையில் தீ விபத்து

டீக்கடையில் தீ விபத்து
X

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் ராம்நகரில் முகமதுஅலி என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாக கடந்த ஒரு வாரகாலமாக கடையை இயக்காமல் புதிய கடை திறப்பு விழா வேலைகளில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் ராம்நகரில் செயல்படும் டீக்கடையிலிருந்து கரும்புகைகள் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கடை உரிமையாளருக்கும் கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்ததுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடைக்குள் இருந்த டேப்பிள்கள் நாற்காலிகள் பாத்திரங்கள் மற்றும் இருசக்கர வாகனம், மிதிவண்டிகள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்திற்கான காரணம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூடியிருந்த கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 March 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  2. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  4. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  6. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  7. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  9. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்