/* */

கோபிச்செட்டிபாளையம்: நாய்கள் கடித்து குதறியதில் மான் குட்டி உயிரிழப்பு

கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள டிஎன் பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதியில், விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மான் குட்டி, நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக , விலங்குகள் அருகேயுள்ள விவசாய தோட்டத்திற்குள் தண்ணீர் தேடியும் உணவு தேடியும் வருகின்றன.

கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள வேட்டையம்பாளையம் காலனியில் உள்ள விவசாய தோட்டத்தில் வாழை, கடலை, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. அந்த தோட்டத்தில் முகாமிட்டு இருந்த புள்ளி மான்களில், சுமார் 3 வயதுடைய ஒரு ஆண் குட்டிமான், நேற்றிரவு தாயை விட்டு பிரிந்து வேறு பகுதிக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து குட்டி மானை கடித்து குதறியது. படுகாயமடைந்த குட்டி மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இன்று காலையில் அந்த வழியாக விவசாய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் இறந்த கிடந்த மானை பார்த்துள்ளனர். இதுகுறித்து டி.என்.பாளையம் வனதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் புள்ளிமனை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த குட்டியை இழந்த தாய் மான் தனது குட்டிகளுடன் விவசாய தோட்டத்தில் அலைமோதி வருகிறது. விவசாயத் தோட்டத்தில் சுற்றிவரும் அந்த மான்களை பிடித்து வனப்பகுதில் விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 July 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!