/* */

ஈரோட்டில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல், பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 395 பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 900 மாணவ-மாணவிகள் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல் முதலாக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவனுடன் படித்த மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மறுநாள் கோபி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மாணவ-மாணவிகள் அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைப்போல் ஒரு சில ஆசிரியர்களுக்கும், பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இவ்வாறாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ -மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்போல் 16 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் 28 மாணவ-மாணவிகளில் 8 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!