/* */

கருப்பு பூஞ்சை நோய்க்கு ஈரோட்டில் படுக்கை வசதி, மருந்து தயார்: அமைச்சர்

கருப்பு பூஞ்சை நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகள், தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக, தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஆலம் பவுண்டே~ன் சார்பில் மருத்துவனைக்கு தேவையான கட்டில், மெத்தை,சக்கர நாற்காளி, ஆக்ஸி பல்ஸ் மீட்டர் உள்ளிட்ட உபகரனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துச்சாமி கலந்து கொண்டு கட்டில், மெத்தை, சக்கர நாற்காளி, ஆக்ஸி பல்ஸ் மீட்டர் உள்ளிட்டவற்றை மருத்துவமனை அலுவலர்களிடம் வழங்கினார். தொடந்து மருத்துவமனையில் படுக்கை வசதிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவ அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம், பவானி அந்தியூர் அரசு மருத்துவமனைகளில் 100 முதல் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்ப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆரம்பகட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பள்ளி கல்லுரிகளில் 3500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் தாமாக முன்வர வேண்டும். சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கப்படும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு, தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது எறு அவர் தெரிவித்தார்.

Updated On: 28 May 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!