/* */

புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்
X

ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்ட பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீடடில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையமானது மூன்று தளங்களை கொண்டது. தரைதளமானது 3978.77 ச.அடியிலும், முதல் தளம் 3186.12 ச.அடியிலும், இரண்டாம் தளம் 2227.70 ச.அடியிலும் அமையவுள்ளது. தரைதளத்தில் முற்றிலும் வேளாண் தோட்டக்கலை மற்றும் விதை சான்றுகள் சேமிப்பு வசதிகளுடனும், முதல் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, விற்பனைத்துறை, விதை சான்று மற்றும் வேளாண்மை பொறியியல் துறைக்கான அனைத்து வசதிகளுடனும், இரண்டாம் தளம் கோபி வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கூட்ட அரங்கை உள்ளடக்கியும் அமையவுள்ளது.

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடமானது கோபி வட்ட அனைத்து வேளாண் அலுவலர்களையும், கோபி வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் நேரடியாக அணுகி அரசு திட்டங்களை பெற்று பயன்பெறும் வகையில் அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் விஸ்வநாதன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள் அ.நே.ஆசைத்தம்பி, முருகேசன், உதவி இயக்குநர் (கோபி) ஜீவாதங்கவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2020 6:18 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!