அந்தியூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

சின்னசாமி.
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி மல்லியூரை சேர்ந்தவர் சின்னசாமி (36). இவர் மீது 4 மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்தநிலையில், கடந்த ஜூலை 29-ம் தேதி சின்னசாமியை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இவர் மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சின்னசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதையடுத்து சின்னசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், இன்று கோவை மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu