சித்தோடு- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

சித்தோடு- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்

சித்தோடு அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒய்யாங்காடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பழனிச்சாமி, குணசிலான், வீரபிரபு, பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.2,960 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி