/* */

கூத்தம்பூண்டி அருகே சாலை விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

கூத்தம்பூண்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கூத்தம்பூண்டி அருகே சாலை விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த டிரைவர் முனுசாமி.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 32). சொந்தமாக சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை முனுசாமி இரு சக்கர வாகனத்தில் ரைஸ்மில் பிரிவில் இருந்து கூத்தம்பூண்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முனியப்பன் கோவில் வளைவு அருகே சென்றபோது, எதிரே வந்த கூத்தம்பூண்டி புடவைக்காரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த கணேஷ் பாபு (வயது 21) என்பவர் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த முனுசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கணேஷ்பாபு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 April 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...
  8. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  9. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  10. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது