கூத்தம்பூண்டி அருகே சாலை விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

கூத்தம்பூண்டி அருகே சாலை விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த டிரைவர் முனுசாமி.

கூத்தம்பூண்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 32). சொந்தமாக சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை முனுசாமி இரு சக்கர வாகனத்தில் ரைஸ்மில் பிரிவில் இருந்து கூத்தம்பூண்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முனியப்பன் கோவில் வளைவு அருகே சென்றபோது, எதிரே வந்த கூத்தம்பூண்டி புடவைக்காரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த கணேஷ் பாபு (வயது 21) என்பவர் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த முனுசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கணேஷ்பாபு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture